follow the truth

follow the truth

May, 17, 2025
HomeTOP1வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை விற்கும் மோசடி

வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை விற்கும் மோசடி

Published on

இந்த நாட்களில் கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ள நிலைமை காரணமாக, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிக்குஞ்சுகளே இன்றைய நாட்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக அதன் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய இரசிங்க தெரிவித்தார்.

இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய இரசிங்க கூறுகிறார்.

“.. வெள்ளத்தில் சிக்கி இறந்த கோழிகளை சுத்தப்படுத்தி, பொதி செய்து விற்பனை செய்யும் கும்பல் குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. கடந்த சில நாட்களாக இது குறித்து விழிப்புடன் இருந்தோம். சுற்றிவளைப்புகளை நடத்தினோம். இது நாடளாவிய ரீதியில் நடக்கிறது. நீங்களும் கோழி இறைச்சிகளை கொள்வனவு செய்யும்போது கவனமாக இருக்கக் கோருகிறோம். குறிப்பாக இறைச்சிக்காக எடுக்கப்படும் கோழி இறைச்சி வெள்ளை நிறமாக இருக்கும். ஆனால் இவை சிவப்பு நிறத்தினை ஒத்தவையாக இருக்கும். இவை எவ்வளவு சூடாக்கினாலும் இவற்றில் உள்ள கிருமிகள் அழியாது “

“களனி ஆற்றைச் சுற்றித்தான் பல கடைகள் உள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்படும் இடங்கள் இருந்தால், மிகக் குறைந்த விலையில் ஆன்லைனில் பொருட்களைக் கொண்டுவருவதாக யூடியூப், பேஸ்புக்கில் விளம்பரங்கள் வருகின்றன. இதற்கு மயங்காதீர்கள். இவை நுகர்வுக்கு தகுதியல்ல. தயவு செய்து அவ்வாறு ஏதும் அறிந்திருந்தால் 1977 எனும் தொலைபேசிக்கு அறியத்தரவும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மின்சார கட்டணம் 18.3 சதவீதத்தினால் உயர்வு?

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்கும் திட்டத்தில் நிலையான கட்டணங்கள் மற்றும் யூனிட் கட்டணங்கள் இரண்டையும் அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுப் பயன்பாட்டு...

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்பு

பண்டாரவளை இ.போ.ச பேருந்துப் பணிப்புறக்கணிப்புப் பணிப்பாளர் ஒருவர் மீது குடிபோதையில் பயணி ஒருவர் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இன்று...

வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தம்

மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து...