follow the truth

follow the truth

February, 12, 2025
Homeஉலகம்மலாவி துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

மலாவி துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்

Published on

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா (Saulos Chilima) உள்ளிட்ட குழுவினர் பயணித்த விமானம் காணாமல் போயுள்ளது.

அவருடன் மேலும் 09 அதிகாரிகள் விமானத்தில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தலைநகர் லிலோங்வேயில் இருந்து நேற்று (10) காலை மலாவி பாதுகாப்பு படை விமானம் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரேடார் அமைப்பிலிருந்து விலகியதாக மலாவி ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

விமானம் Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க திட்டமிடப்பட்டது.

தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் தொடரும் என ஜனாதிபதி லாசரஸ் சக்வேரா தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் இராணுவத்தினர் தேடுதல்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விமானம் கண்டுபிடிக்கப்படும் வரை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவ்வாறே அண்மையில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்டோர் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகிய நிலையில் அனைவரும் உயிரிழந்தமையும் நினைவுகூரத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹஜ் யாத்திரை – இனி குழந்தைகளுக்கு அனுமதியில்லை

பாதுகாப்பு மற்றும் நெரிசலில் சிக்குவதைத் தவிர்க்கும் வகையில் ஹஜ் பயணம் மேற்கொள்வோருடன் இனி குழந்தைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று...

குவாத்தமாலா பஸ் விபத்தில் 50 பேர் உயிரிழப்பு

மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலாவில் நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து பேருந்து கீழே விழுந்த விபத்தில்  50 பேர் உயிரிழந்துள்ளனர். 70க்கும் அதிகமானவர்களுடன்...

அலுமினியம் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீதம் வரி

அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். கனடா,...