follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1மிஹிந்தலை தேரரின் முறைப்பாட்டுக்கு பொலிஸ் மா அதிபரிடமிருந்து உத்தரவு

மிஹிந்தலை தேரரின் முறைப்பாட்டுக்கு பொலிஸ் மா அதிபரிடமிருந்து உத்தரவு

Published on

மிஹிந்தலை விகாரை பொசன் பண்டிகைக்கு தயாராகி வரும் வேளையில், சந்தேகத்திற்குரிய நபர்கள் தொடர்பில் முறையான விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் வடமத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மிஹிந்தலை விகாரையின் தலைவர் கலாநிதி வளவ ஹங்குனவெவே தம்மரதன தேரர் பொலிஸ் மா அதிபரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் பொசன் பண்டிகைக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மிஹிந்தலைக்கு வந்து சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில், மிஹிந்தலை விகாரை பிரதானி பொலிஸ் மா அதிபரிடம் இவ்வாறான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதம்

கடலோரப் பாதையில் ரயில் சேவைகள்  இன்று பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே  திணைக்களம்  தெரிவித்துள்ளது.  மொரட்டுவ மற்றும் பாணந்துறை இடையேயான தண்டவாளத்தில் ஏற்பட்ட...

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...