வவுனியாவுக்கும் கெபிதிகொல்லேவா இற்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று (18) இரவு 11.02 மணியளவில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இரவு 11.02 மணியளவில் லேசான சத்தத்துடன் நில அதிர்வு தொடங்கி சில நிமிடங்களில் முடிவுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
வவுனியாவுக்கு அருகில் 2.3 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவிக்கையில் வீடுகளுக்கு சேதமோ அனர்த்த நிலைமைகள் எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று தெரிவித்திருந்தார்.