follow the truth

follow the truth

August, 26, 2025
Homeஉள்நாடுஇலங்கையில் இளைஞர்களிடையே அதிகம் பரவும் எச்.ஐ.வி

இலங்கையில் இளைஞர்களிடையே அதிகம் பரவும் எச்.ஐ.வி

Published on

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் 15வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்ட பெரும்பாலானோர் மத்தியில் எச்.ஐ.வி பரவல் கண்டறியப்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதுவரை 3700 எச்.ஐ.வி தொற்றாளர்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இதில் 60வீதமானோர் மருத்துவ சிகிச்சைகளை பெற்று வருகின்ற வேளை 40 வீதமானோர் சமூகத்துக்கு மத்தியில், தாம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்று தெரியாமலேயே வாழ்ந்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் 15-24 வயதுக்கு உட்பட்டவர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டமைக்கான காரணம், சமூகத்தில் பாலியல் கல்வி இல்லாமையாகும் . அத்துடன் இளையோர் மத்தியில் 90வீதமான உடலுறவுகள், பாதுகாப்பற்ற முறையில் இடம்பெறுவதும் எச்.ஐ.சி சமூகத்தில் பரவுவதற்கான காரணம் என்று எச்ஐவி கட்டுப்பாட்டு திட்டப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ரசன்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...