follow the truth

follow the truth

June, 18, 2025
HomeTOP1இலங்கைக்கான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்

இலங்கைக்கான கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்

Published on

ஆறு மில்லியன் அமெரிக்க டொலர் இந்திய மானியத்தின் கீழ் நிறுவப்பட்ட இலங்கையின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (MRCC) இன்று (20) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அதனைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இணைந்து இது தொடர்பான டிஜிட்டல் பலகையை வெளியிட்டார்.

இந்த ஒருங்கிணைப்பு நிலையமானது கொழும்பு கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் ஒரு துணை மையம் மற்றும் காலி, அறுகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லறை, பெதுருதுடுவ மற்றும் மொல்லிக்குளம் ஆகிய இடங்களில் ஆளில்லா நிறுவல்களை உள்ளடக்கியது.

இதேவேளை, இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளையில் நிர்மாணிக்கப்பட்ட 106 வீடுகளை திறந்து வைப்பது தொடர்பான டிஜிட்டல் நினைவுப் பலகை திரைநீக்கம் இந்திய வெளிவிவகார அமைச்சர் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு மற்றும் திருகோணமலையில் இரண்டு மாதிரிக் கிராமங்களில் நிர்மாணிக்கப்பட்ட தலா 24 வீடுகள் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச சேவையில் ஊழல் குறைக்கப்பட்டால், உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல இலங்கையையும் அபிவிருத்தி செய்ய முடியும்

இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற நேர்மையான அரசாங்க சேவையைக் கட்டியெழுப்ப சகல அரசாங்க உத்தியோகத்தர்களும் மனசாட்சிக்கு இணங்கச் சரியான...

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...