follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுசஹ்ரான் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

சஹ்ரான் மனைவிக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும், தற்கொலைகுண்டுத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதிக்கு எதிரான குற்றப்பத்திரிகையை சட்டமா அதிபர் திணைக்களம், கல்முனை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இதன்படி, குற்றப்பத்திரம் மீதான விசாரணை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.அன்றைய தினம் பிரதிவாதியான அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவை நீதிமன்றில் பிரசன்னப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்களையடுத்து அம்பாறை, சாய்ந்தமருது பிரதேசத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களின் பின்னர், வெடிப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாராளுமன்ற உறுப்பினராக முகம்மது சரிவு அப்துல் வாஸித் நியமனம்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் முகம்மது சாலி நழீம் சுய விருப்பின் அடிப்படையில் பதவியை இராஜினாமா...

கடந்த 6 மாதங்களில் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் வருகை

2025 ஜூன் மாதம் இறுதிக்குள் 1,168,044 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை...

அஸ்வெசும – மேலும் 9 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்

அஸ்வெசும திட்டத்தின் கீழ் 1.8 மில்லியன் மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் 9 இலட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்...