follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1சவால்களுக்கு பயப்பட வேண்டாம் - ஜனாதிபதி

சவால்களுக்கு பயப்பட வேண்டாம் – ஜனாதிபதி

Published on

எதிர்கால சந்ததியினருக்கு நல்ல கல்வியைப் பெற்றுக் கொள்ளவும், கொள்கைகளை மதித்து, சவால்களுக்கு பயப்படாமலும் இருக்க வேண்டும் என்பதே எனது ஆலோசனை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பிரதிநிதிகள் கூட்டத்தில் யுவதியொருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் பிரதிநிதிகள் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டதுடன் அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார்.

கேள்வி – ஜனாதிபதி அவர்களே, நாடு நெருக்கடியான நிலையில் இருந்த போது நீங்கள் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டீர்கள். அந்தச் சவாலை நீங்கள் எவ்வாறு சமாளித்தீர்கள், மேலும் வருங்கால சந்ததியினர் ரோயல் கல்லூரி போன்ற பாடசாலைகளில் படிக்கும் வாய்ப்பு கிடைக்குமா?

பதில்- “எல்லோரும் சவால்களுக்கு பயந்த போது நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். உங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், சவால்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டியதில்லை. காலணிகளை அணிவது ஓடி வெற்றி பெறுவதற்கு அதனை விட்டு பயந்து பிரச்சினைகளுக்கு பயந்து ஓடக்கூடாது. நான் நம்பினேன். இந்த சவாலில் இருந்து நான் நாட்டை காப்பாற்ற முடியும் என்று..

கேள்வி – நமது நாட்டில் வளங்கள் அதிகம். ஆனால் உணவு உள்ளிட்ட பல பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறோம். நமது தொழில்களை மேலும் மேம்படுத்தினால் இந்த நிலையை மாற்றலாம் அல்லவா?

பதில் – “உங்களுக்குப் பிடித்த பாடகர் யுவன் சங்கர் ராஜா என்று நீங்கள் சொன்னீர்கள். அதனால் நாங்களும் பாடல்களை இறக்குமதி செய்கிறோம் அல்லவா? திறந்த உலகத்தை எதிர்கொள்ளும் வகையில் நமது தொழில்களை மேம்படுத்த வேண்டும் என்பதில் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாங்கள் உற்பத்தி செய்ததை நாங்கள் ஏற்றுமதி செய்யவில்லை. நாட்டின் வளங்கள் எங்களிடம் இல்லை, எரிபொருளை வாங்குவதற்கு அந்நிய செலாவணி தேவை, அதனால் கடனை செலுத்த முடியவில்லை, எங்கள் வளங்களில் ஒன்று திறமையான தொழிலாளர்கள், மட்டக்களப்பில் நூறு சுற்றுலா விடுதிகளை உருவாக்க முடியும். நாம் ஒரு நவீன விவசாயத்தை நோக்கி நகர வேண்டும், அப்போதுதான் அந்நியச் செலாவணியை உயர்த்த முடியும், ஏற்றுமதிப் பொருளாதாரத்திற்கு நாம் திரும்பவில்லை என்றால், அதே பிரச்சினையை நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரே வழி சுற்றுலாத் தொழில் உட்பட நமது விவசாயத் தொழிலாகும். தொழில்களை அபிவிருத்தி செய்து ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துதல். இறக்குமதிப் பொருளாதாரத்தில் இருந்து ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாற்ற பொருளாதார மாற்றச் சட்டத்தை நாங்கள் கொண்டு வருகிறோம்.

கேள்வி – நீங்கள் எமது நாட்டின் வெற்றிகரமான தலைவர். திறமையான அரசியல்வாதி. உங்கள் அனுபவத்தின் அடிப்படையில், அடுத்த தலைமுறையின் வெற்றிக்கு என்ன அறிவுரை கூறுவீர்கள்?

பதில்- “கடுமையாகப் படியுங்கள். புத்திசாலித்தனமாக இருங்கள். நீங்களே இருங்கள், உங்களை நீங்களே நம்புங்கள் மற்றும் கொள்கைப் பிடிப்புடன் இருங்கள். சவால்களுக்கு ஒருபோதும் பயப்படாதீர்கள்.”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...