follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடியிலிருந்து 1 கோடி ரூபா

காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடியிலிருந்து 1 கோடி ரூபா

Published on

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது எனவும், 05 வருடங்களுக்குள் பலஸ்தீன அரசை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே இலங்கையின் நிலைப்பாடு எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காஸாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இன்று (23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட பிரார்த்தனையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல் காஸா சிறுவர் நிதியத்திற்கு (Children of Gaza Fund) நிவாரணம் வழங்குவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஒரு கோடியே எழுநூற்று அறுபத்து ஒன்பதாயிரத்து நானூற்று பதினேழு ரூபாவை நன்கொடையாக வழங்கியது தொடர்பான காசோலையானது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...