follow the truth

follow the truth

June, 17, 2025
Homeவிளையாட்டுஅரையிறுதியில் தென்னாபிரிக்கா அணி

அரையிறுதியில் தென்னாபிரிக்கா அணி

Published on

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் எட்டு சுற்றின் தீர்க்கமான போட்டியொன்று இன்று (24) இடம்பெற்றது.

இது தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் இடம்பெற்றது. குறித்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்களைப் பெற்றது.

கைல் மியர்ஸ் 35 ஓட்டங்களும் ரோஸ்டன் சேஸ் 42 பந்துகளில் 52 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணிக்கு 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 15 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது.

இதனையடுத்து டக்வொர்த் மற்றும் லூயிஸ் முறைப்படி தென்னாப்பிரிக்காவின் இலக்கு 17 ஓவர்களில் 123 ஓட்டங்களாக மாற்றப்பட்டது.

அவ்வப்போது விக்கெட்டுகளை இழந்தாலும், 17வது ஓவரின் முதல் பந்தில் மார்கோ ஜான்சனின் 6 ஓட்டங்களுடன் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அதன்படி, தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்குத் தகுதி பெற்றதால், மேற்கிந்தியத் தீவுகள் போட்டியிலிருந்து வெளியேறியது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

பங்களாதேஷுக்கு எதிராக நாளை (17) ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முன்னிட்டு 18 வீரர்களைக் கொண்ட...

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் மகுடத்தை சூடியது தென் ஆபிரிக்கா

நடப்பு சாம்பியன் அவுஸ்திரேலியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்சில்...