follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுஇந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரர் ஒருவர் பலி

இந்திய மீனவர்களை கைது செய்ய சென்ற கடற்படை வீரர் ஒருவர் பலி

Published on

டெல்ஃப்ட் தீவுக்கு அருகில் கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை வீரர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

வட கடலில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கை கடற்படையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அங்கு சுங்கக் கப்பலில் இருந்த இந்திய மீனவர்கள் 10 பேரை கைது செய்ய கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளது, அப்போது கடற்படை வீரர் ஒருவர் இரு படகுகளுக்கு இடையே சிக்கி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கிய கடற்படை சிப்பாய் கரைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் காங்கசந்துறை மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...