follow the truth

follow the truth

October, 22, 2024
Homeவிளையாட்டுடக்வொர்த் லுவிஸ் முறையைக் கண்டுபிடித்த ஃபிராங்க் டக்வொர்த் மறைந்தார்

டக்வொர்த் லுவிஸ் முறையைக் கண்டுபிடித்த ஃபிராங்க் டக்வொர்த் மறைந்தார்

Published on

ஆங்கில புள்ளியியல் நிபுணரும், டக்வொர்த் லுவிஸ் (DLS) முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவருமான ஃபிராங்க் டக்வொர்த் தனது 84 வது வயதில் காலமானார்.

ஃபிராங்க் டக்வொர்த் ஜூன் 21 அன்று உடல்நிலை மற்றும் வயது மூப்பின் காரணமாக காலமானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

ஃப்ராங்க் டக்வொர்த் மற்றும் சக புள்ளியியல் நிபுணரான டோனி லுவிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட டக்வொர்த் லுவிஸ் முறை, மழையால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் போட்டிகளில் முடிவுகளைத் தீர்மானிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த முறை 1997 இல் சர்வதேச கிரிக்கெட்டில் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. 2001 இல் துண்டிக்கப்பட்ட விளையாட்டுகளில் திருத்தப்பட்ட இலக்குகளை அமைப்பதற்கான நிலையான முறையாக சர்வதேச கிரிக்கெட் வாரியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

டக்வொர்த் மற்றும் லுவிஸின் ஓய்வுக்குப் பிறகு இந்த முறை டக்வொர்த் – லுவிஸ் – ஸ்டெர்ன் முறை என மறுபெயரிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த முறையில் அவுஸ்திரேலிய புள்ளிவிவர நிபுணர் ஸ்டீவன் ஸ்டெர்ன் சில மாற்றங்களைச் செய்தார்.

டக்வொர்த் மற்றும் லுவிஸ் இருவரும் ஜூன் 2010 பிரித்தானிய பேரரசில் உறுப்பினர் பதவியைப் பெற்றனர்.

டக்வொர்த் லுவிஸ் முறையானது சிக்கலான புள்ளியியல் பகுப்பாய்வை அடிப்படையாகக் கொண்டது. இது மீதமுள்ள விக்கெட்டுகள், இழந்த ஓவர்கள் போன்ற பல காரணிகளைக் அடிப்படையாகக் கொண்டு, இரண்டாவது துடுப்பாட்டம் செய்யும் அணிக்கு திருத்தப்பட்ட இலக்குகளை நிர்ணயிக்கிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெறவுள்ளது இது நியூசிலாந்து மகளிர் அணிக்கும்...

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 03 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று...

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 16 வீரர்கள் கொண்ட அணிக்கு சரித் அசலங்க...