follow the truth

follow the truth

May, 1, 2025
Homeலைஃப்ஸ்டைல்குழந்தைகள் பிடிவாதத்திற்கு யார் காரணம்?

குழந்தைகள் பிடிவாதத்திற்கு யார் காரணம்?

Published on

குழந்தை பிடிவாதம் பிடித்தல் என்பது இயல்பான ஒரு விஷயம்தான். குறும்பு செய்தல், அடம் பிடித்தல் போன்றவை குழந்தைகளுக்கு உரிய குணங்கள். ஆனால் அந்த பிடிவாதம் பிடித்தல் என்பது குழந்தை வளர வளர குறைய வேண்டுமே தவிர.. குழந்தையுடன் சேர்ந்து அந்த பிடிவாத குணமும் வளர்வது நல்லதல்ல.

ஆரம்பத்தில் குழந்தைகள் பிடிவாதம் பிடிப்பது இயல்பு என்றாலும் தான் நினைத்தது நடக்கும் வரை அழுது கொண்டே இருப்பது, கத்தி அலறுவது, கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி எறிவது, கீழே விழுந்து உருண்டு புரண்டு அழுவது போன்றவை பிடிவாதத்தின் அடுத்த நிலைகளாகும். குழந்தைகளை இந்த நிலையிலேயே சரி செய்யாவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகு சிறு சிறு தோல்விகளை கூட தாங்கிக் கொள்ள முடியாதவர்களாகவும், தான் நினைத்த காரியம் நடந்தே ஆக வேண்டும் என்ற தவறான மனப்பான்மை கொண்டவர்களாகவும் மாறி விடுகிறார்கள். சிறிதும் தன்னம்பிக்கை இன்றி தான் நினைத்ததை அடுத்தவர்கள் செய்து முடித்து தர வேண்டும் என்ற எண்ணமே இவர்களிடம் மேலோங்கி காணப்படும்.

குழந்தைகள் ஏதேனும் பொருட்களைக் கேட்டு அடம் பிடித்து நாம் வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம் என்றால் அந்த சூழ்நிலையை குழந்தையிடம் எடுத்துரைக்க வேண்டும். இப்பொழுதே வேண்டும் என்று குழந்தை அடம் பிடித்தால் அடுத்த முறை என்றால் அடுத்த முறை தான் என்று குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

குழந்தை ஏதேனும் பொருளுக்கு அடம் பிடிக்க தொடங்கினால் அது அடம்பிடித்து முடிக்கும் வரை யாரும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாலே அந்த குழந்தை யாரும் கண்டு கொள்ளவில்லை என்று சிறிது நேரத்தில் தன்னாலே சமாதானம் ஆகிவிடும்.

குழந்தைகளுக்கு தேவை இல்லாத பொருட்களுக்கு இல்லை என்று சொல்லிப் பழகுங்கள் எது நினைத்தாலும் கிடைக்கும் என்ற மனப்பான்மையை இது மாற்றும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மயோனைஸ் விற்பனைக்கு தடை

முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு ஓராண்டு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு தமிழக அரசு...

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் தினமும் சாப்பிடலாமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக மாம்பழத்தை தவிர்க்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது. ஆனால் மிக குறைந்த அளவு...

இளநீர் இருக்கா? அப்போ இத ட்ரை பண்ணுங்க! வெயிலுக்கு இதமான சர்பத்

கோடை கால வெயிலுக்கு இதமான சர்பத் எளிதான‌‌ முறையில் செய்வது எப்படி என்று இந்த பார்க்கலாம். கோடை வெயில் காலம்...