follow the truth

follow the truth

August, 20, 2025
Homeஉள்நாடு2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

2009க்கு முன்னர் பெற்ற சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து?

Published on

‘2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பெறப்பட்ட அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் இரத்து செய்யப்படும்.’ என்று, 2025 ஜூன் மாதம் 12 ஆம் திகதி பத்திரிகை ஒன்றில் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பான இறுதித் தீர்மானம் ஒன்றை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் இதுவரையிலும் எடுக்கவில்லை என்றும், அது குறித்து எதிர்கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2009 ஆம் ஆண்டிற்கு முன்னர் பெறப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரங்களுக்குப் பதிலாக புதிய சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு ஊடகங்களினூடாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...