follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1கொழும்பு வாகனங்களுக்கு டிக்கெட் கிழிக்கும் நிறுவனங்கள் அரசுக்கு 26 கோடி பொல்லு

கொழும்பு வாகனங்களுக்கு டிக்கெட் கிழிக்கும் நிறுவனங்கள் அரசுக்கு 26 கோடி பொல்லு

Published on

கொழும்பு நகரில் போக்குவரத்து நிறுத்தங்களை நடத்துவதற்கு கொழும்பு மாநகர சபையினால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் இதுவரை 26 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வரிகளை செலுத்த தவறியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பணிப்பாளர் பொறியியலாளர் பி. ஏ.சந்திரபால தெரிவித்தார்.

கொழும்பு நகரில் போக்குவரத்து நிறுத்தங்களை நடத்துவதற்கு கொழும்பு மாநகர சபையினால் அனுமதிக்கப்பட்ட நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுக்கான 20 கோடி ரூபாவிற்கும் அதிகமான வரிகளை செலுத்தத் தவறிய நிலையில், 2024 ஆம் ஆண்டிற்கான அதே போக்குவரத்து நிறுத்தங்களை நடத்துவதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் போக்குவரத்து நிறுத்தங்களை நடத்த அனுமதிக்கப்பட்ட 26 நிறுவனங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 20,41,64119 ரூபாவையும், 2024 ஏப்ரல் 30ஆம் திகதிவரை 26,48,59471 ரூபாவையும் வரி செலுத்தத் தவறியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...