follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

Published on

டி20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 5 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 10 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

57 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணியினர் 8 ஓவர்கள் மற்றும் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தனர்.

இதன்படி தென்னாபிரிக்க அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

இனி கடவுச்சீட்டு தட்டுப்பாட்டுக்கு இடமில்லை

புதிய கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் செயற்பாடு நேற்று முதல் ஆரம்பமானது. பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு...

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம் கிடைக்கப்பெறுமானால், நாட்டிற்கு நன்மை ஏற்படும் வகையில்...