follow the truth

follow the truth

June, 2, 2025
HomeTOP1ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்றும் சுகயீன விடுமுறையில்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் இன்றும் சுகயீன விடுமுறையில்

Published on

சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (26) ஆசிரியர் – அதிபர் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

எவ்வாறாயினும், அனைத்து அரச பாடசாலைகளும் இன்று (27) வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று ஆரம்பமாகவிருந்த கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் இரண்டாம் கட்டப் பரீட்சையின் மதிப்பீடு தவிர்க்க முடியாத காரணங்களால் மேற்கொள்ளப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை (28) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் அறிவிப்பை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லிந்துலை நகரசபையின் முன்னாள் தலைவருக்கு விளக்கமறியல்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று கைது செய்யப்பட்ட தலவாக்கலை - லிந்துலை நகர சபையின் முன்னாள் தலைவர்...

நாடு திரும்பினார் அனுதி குணசேகர

இந்தியாவில் நடைபெற்ற 72வது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அனுதி குணசேகர நாடு திரும்பியுள்ளார். கடந்த மே 31...

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழு நியமனம்

தேசிய விளையாட்டுத் தேர்வுக் குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில்...