follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுடயானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து இரண்டு நீதிபதிகள் விலகல்

டயானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து இரண்டு நீதிபதிகள் விலகல்

Published on

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.

வெலிகம மாநகர சபையின் உறுப்பினர் பதவியை நீக்கி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் மூலம் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, வெலிகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று (26) பிரிதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ​​இந்த மனுக்களை பரிசீலனை செய்வதிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட பெஞ்சின் அங்கத்தவர் நீதிபதிகளாக கடமையாற்றிய குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த மனுவை ஆகஸ்ட் 5-ம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திகதியை நிர்ணயம் செய்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...