follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுயூடியூபரான இலங்கைப் பெண் பின்லாந்தில் கொலை

யூடியூபரான இலங்கைப் பெண் பின்லாந்தில் கொலை

Published on

பின்லாந்தில் வசித்து வந்த Hiruni’s Northern Life என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிருணி தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

அந்நாட்டில் வாழ்ந்து வரும் அவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார்.

இந்த மரணம் தொடர்பான மேலதிக விபரங்களை பின்லாந்து ஊடகங்கள் வெளியிடாததுடன், சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்திரம் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து ஊடகங்கள் ஹிருணியின் குடும்பத்தை தெற்காசிய குடும்பமாக அறிமுகப்படுத்தியுள்ளன.

அவர்கள் நீண்ட காலமாக அங்கு வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் சமூக ஊடகங்களில் செயலில் உள்ளதாகவும், குடும்ப வீடியோக்களை ஊடகங்களுக்கு தொடர்ந்து அனுப்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மரணம் கடந்த வாரம் புதன்கிழமை நிகழ்ந்துள்ளது.

அன்றைய தினம் இச்சம்பவத்தையடுத்து இந்த வீட்டுக்குச் சென்ற பக்கத்து வீட்டுக்காரர் வீட்டின் கதவுக்கு அருகில் பெரிய இரத்தக்கறை இருப்பதைக் கண்டுள்ளார். ஹிருணியின் வீடு ஹெல்சின்கியில் அமைந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் தெரிவிக்கின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...