இரத்தினபுரி – எஹெலியகொட உடுவக பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று(27) மதியம் 1 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இன்று காலை முதலே மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, வீடுகளைச் சுற்றியிருந்தவர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போது மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 48 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.