follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுகாணாமல் போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கண்டுபிடிப்பு

காணாமல் போன இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி கண்டுபிடிப்பு

Published on

கடந்த புதன்கிழமை (26) இலங்கைக்கு விஜயம் செய்து காணாமல் போன 25 வயதான இஸ்ரேலிய சுற்றுலாப் பயணி தமர் அமிதாய் (Tamar Amitai) கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை ரொலக்ஸ் ஹோட்டலில் தங்கியிருந்த இந்த யுவதி, கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி இலங்கைக்கு வந்து திருகோணமலை பகுதியில் தனியாக பயணித்த போது காணாமல் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

புதன்கிழமை (26) முதல் அவர் விடுதிக்கு திரும்பவில்லை என அவர் தங்கியிருந்த ஹோட்டலின் உரிமையாளர்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதன்படி, உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநர் செயலகத்தின் மேற்பார்வையில், பொலிஸார், இராணுவம், பிராந்திய செயலகம், உப்புவெளி ஆகியன இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையில் தமர் அமிதை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர் ஏ.பி.மாதன் தலைமையில் குழுவொன்றை நியமித்த ஆளுநர், காணாமல் போன சுற்றுலாப் பெண் தொடர்பான அறிக்கையை மூன்று மணித்தியாலங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அவர் தனது ஹோட்டலில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளிங்கோவிலில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அந்தப் பகுதிக்குச் சென்றபோது மயங்கி விழுந்துவிட்டதாகவும், ஆனால் உடல்ரீதியாகவோ, பாலியல் ரீதியாகவோ எந்தவிதமான துஷ்பிரயோகமும் இன்றி நல்ல நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்புச் செய்தி
திருகோணமலையில் இஸ்ரேலிய பெண் மாயம்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...