follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமீனவ சமூகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

மீனவ சமூகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

Published on

மேல், சப்ரகமுவ, மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை, தென்மேற்கு பருவமழை தீவிரமான காலநிலை காரணமாக அரபிக் கடற்பகுதியில் கடும் காற்று வீசக்கூடும் எனவும், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

07 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 68 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வரையில் வீசக்கூடும் எனவும், இப்பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மக்கள் கரைக்கு செல்லுமாறும் அல்லது உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...