follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுஇன்று முதல் இலங்கையில் ஒக்டேன் 100 பெட்ரோல் விற்பனைக்கு

இன்று முதல் இலங்கையில் ஒக்டேன் 100 பெட்ரோல் விற்பனைக்கு

Published on

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) இன்று (02) முதல் ஒக்டேன் 100 பெட்ரோலை தனது பல விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் XP100 இன் உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு Ninewells LANKA IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கௌரவ எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கௌரவ LIOC தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதன் படி உலகில் இவ்வகை பெட்ரோலை விற்பனை செய்யும் எட்டாவது நாடாக இலங்கை மாறும்.

நவீன வாகனங்களில் பயன்படுத்துவதற்கு உகந்த இவ்வகை எரிபொருளின் மூலம் அதிக மைலேஜுடன் சீரான ஓட்டம் மற்றும் அதிக எஞ்சின் செயல்திறனை அனுபவிக்க முடியும் என லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது.

இந்த வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 793 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...