follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தயாசிறி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு தயாசிறி

Published on

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் பதவியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை வெளியேற்றுவதற்கு தடை விதித்து அக்கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (02) இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அதே கட்சியின் பிரதிச் செயலாளர் சரத் ஏக்கநாயக்க ஆகியோரை பிரதிவாதிகளாக்கி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தாக்கல் செய்த வழக்கை பரிசீலித்த கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி அனுர விக்கிரமசிங்க இந்த தடையை பிறப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணை செய்யப்பட்டு இறுதித் தீர்மானம் வழங்கப்படும் வரை இந்த தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் இந்த உத்தரவின்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக செயற்படுவதற்கு எவ்வித தடையும் இல்லை எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...