வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹரவில் நடந்து சென்ற யானை குட்டி ஒன்று குழம்பியுள்ளது.
இதனால் நிலவிய பதற்ற நிலை காரணமாக பெரஹரவினை பார்வையிடச் சென்றவர்களில் 15 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ‘டெய்லி சிலோன்’ செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், நேற்றிரவு (06) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.