follow the truth

follow the truth

May, 6, 2025
Homeஉலகம்இலங்கையர் கொலை: 100 பேர் கைது

இலங்கையர் கொலை: 100 பேர் கைது

Published on

பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 100 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பிரதான சந்தேகநபர்களும் அடங்குவதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும்  இலங்கையர் தொடர்பான,  பல தகவல்கள் வெளியாகியுள்ளன.கனேமுல்லை – வெலிபிஹில்ல பகுதியைச் சேர்ந்த, பிரியந்த குமார தியவடன என்ற குறித்த நபர், 11 ஆண்டுகளுக்கு முன்னர் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார்.

2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் க்ரசண்டி டெக்ஸ்டைல் என்ற ஆடைத் தொழிற்சாலையில், கைத்தொழில் பொறியியல் முகாமையாளராக பணியில் இணைந்ததுடன், 2012இல் சியல்கோட்டில் உள்ள ராஜ்கோ என்ற தொழிற்சாலையில் பொதுமுகாமையாளராக பணியில் இணைந்துள்ளார்.

தமது தொழிற்சாலையில் ஒட்டப்பட்டிருந்த மதசார் பதாகை ஒன்றை அவர் அகற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்லாம் மதத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டு, இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

20 ஆவது ஐக்கிய நாடுகள் சபையின் வெசாக் தின கொண்டாட்டத்தில் ஜனாதிபதி நாளை பிரதான உரை

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் (Luong Cuong) அழைப்பின் பேரில் வியட்நாமிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி...

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மரணம் – மேலும் நால்வர் பொலிஸில் சரண்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் நான்கு மாணவர்கள் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர். இதையடுத்து குறித்த மாணவர்கள் விசாரணைக்காக...

பிரசன்ன ரணவீரவிற்கு பகிரங்க பிடியாணை

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரை கைது செய்யுமாறு நீதவான் பகிரங்க...