follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

தபால் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

Published on

தபால் ஊழியர்கள் நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், இன்று (07) மாலை 04 மணி முதல் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஏனைய அனைத்து தபால் நிலையங்களிலும் இன்று (07) நள்ளிரவு முதல் இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழில் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...