follow the truth

follow the truth

March, 27, 2025
HomeTOP1விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

Published on

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் ஏனைய விடயங்களைத் தெரிவித்து விமல் வீரவன்சவினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நிஷான் பிரமித்திரத்ன, சட்டத்தரணி கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை நிராகரிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கைதான சாமர சம்பத் தசநாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில்...

நாளை ஆர்ப்பாட்டம் பேரணி நடத்த தடை

தொடர்ச்சியான போராட்டம் காரணமாக, கொழும்பு நகர மண்டபத்தைச் சுற்றி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுகாதார அறிவியல் பட்டதாரிகள் சங்கம்...

சாமர சம்பத்துக்கு பிணை – வெளிநாடு செல்ல தடை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை பிணையில்...