follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

விமல் வீரவன்சவினால் இடைக்கால மனு

Published on

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை நிராகரிக்குமாறு கோரி தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இடைக்கால மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட போது, ​​ஜனாதிபதியின் பதவிக் காலத்தை 5 வருடங்களாக மட்டுப்படுத்துவதே நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருந்தது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும் ஏனைய விடயங்களைத் தெரிவித்து விமல் வீரவன்சவினால் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நிஷான் பிரமித்திரத்ன, சட்டத்தரணி கமிது கருணாசேன, ஷெனாலி டயஸ், நிமாஷி பெர்னாண்டோ உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் மனுவை நிராகரிக்குமாறு கோரி இன்று (08) உச்ச நீதிமன்றில் இந்த இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...