follow the truth

follow the truth

July, 17, 2025
HomeTOP1அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி

அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி

Published on

அதுருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை பத்து மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவர் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் பிரபல பாடகி கே சுஜீவா.

அதுருகிரியவில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

கிளப் வசந்த அங்கு உயிர் இழந்தார், மேலும் காயமடைந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் என கூறப்படும் வாகனம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று(16) கொழும்பு...

2026 ம் ஆண்டுக்கான பூர்வாங்க வரவு செலவுத் திட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பிப்பது தொடர்பான பூர்வாங்கத் வரவு செலவுத் திட்ட திட்டமிடல்...

சீன அரசிடமிருந்து கிடைக்கப் பெற்ற நன்கொடையானது எமக்குப் பெரும் மதிப்பு மிக்கதாகும்

2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைகளுக்குத் தேவையான ரூ.5,171 மில்லியன் பெறுமதியான துணி அனைத்தும் சீன அரசாங்கத்தின் மானியமாக...