follow the truth

follow the truth

June, 1, 2025
HomeTOP1அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி

அதுருகிரிய துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒருவர் பலி

Published on

அதுருகிரிய நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) காலை பத்து மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில் பிரபல வர்த்தகரான சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்த என்பவர் கொல்லப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 பேர் காயமடைந்தனர், அவர்களில் ஒருவர் பிரபல பாடகி கே சுஜீவா.

அதுருகிரியவில் மணிக்கூண்டு கால்வாய்க்கு அருகில் உள்ள அழகு நிலையம் திறப்பு விழாவின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 6 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையிலும் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

கிளப் வசந்த அங்கு உயிர் இழந்தார், மேலும் காயமடைந்த ஒருவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர்கள் வந்த வாகனம் என கூறப்படும் வாகனம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எரிபொருள் விலையில் மாற்றமில்லை

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப, எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படவில்லை என இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது....

5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

நாட்டின் சுகாதாரம் மற்றும் ஊடகத் துறைகளின் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்

இலங்கைக்கான ரஷ்ய தூதர் லெவன் எஸ். தாகரியன் (Levan S. Dzhagaryan) மற்றும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...