follow the truth

follow the truth

October, 22, 2024
HomeTOP1கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றம்

கிளப் வசந்தவின் மனைவி களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றம்

Published on

அதுருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் மனைவி மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இருந்து களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஹோமாகம ஆதார வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நேற்றைய துப்பாக்கிச் சூட்டில் அவரது மனைவி மெனிக் விஜேவர்தனவும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், சத்திரசிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு வைத்தியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யெமானா கௌஷதிக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...