follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுமின் கட்டண திருத்தம் குறித்து இன்று பொதுமக்களின் யோசனைகள் ஏற்பு

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று பொதுமக்களின் யோசனைகள் ஏற்பு

Published on

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் வாய்மூல கருத்துக்கள் இன்று (09) பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

மின்சார சட்டத்தின் பிரகாரம் இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கு முன்னதாக இந்த பொது கலந்தாய்வு நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வாய்மூல பொது அணுகல் அமர்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

பல்வேறு மின்சார நுகர்வோர் குழுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 50 பேர் இன்று உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்க பதிவு செய்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு ஜூலை 15ஆம் திகதி பொது கலந்தாய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...