follow the truth

follow the truth

October, 22, 2024
Homeஉள்நாடுமின் கட்டண திருத்தம் குறித்து இன்று பொதுமக்களின் யோசனைகள் ஏற்பு

மின் கட்டண திருத்தம் குறித்து இன்று பொதுமக்களின் யோசனைகள் ஏற்பு

Published on

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் வாய்மூல கருத்துக்கள் இன்று (09) பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.

மின்சார சட்டத்தின் பிரகாரம் இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அதற்கு முன்னதாக இந்த பொது கலந்தாய்வு நடத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, வாய்மூல பொது அணுகல் அமர்வு இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெற உள்ளது.

பல்வேறு மின்சார நுகர்வோர் குழுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 50 பேர் இன்று உத்தேச மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் கருத்து தெரிவிக்க பதிவு செய்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி முடிவு ஜூலை 15ஆம் திகதி பொது கலந்தாய்வுக்குப் பிறகு அறிவிக்கப்பட உள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ நாளை CIDயில் முன்னிலை

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட பி.எம்.டப்ளிவ் வாகனத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில் நாளைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்...

ஏப்ரல் 21 தாக்குதல் – கம்மன்பிலவின் அறிக்கையை அரசு ஏற்றுக்கொள்ளப் போவதில்லை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணை குழு அறிக்கையை...

முறைகேடு அல்லது மோசடி குறித்து அறிவிக்க தொலைபேசி இலக்கம்

பொலிஸார் தொடர்பில் ஏதேனும் முறைகேடு அல்லது மோசடி நடந்தால் அது குறித்து தெரிவிக்க பொதுமக்களுக்காக பொலிஸார் அவசர தொலைபேசி...