follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் நிலவும் பிரச்சினைகளை துரிதமாக தீர்க்குமாறு கல்வி அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Published on

கொழும்பு, மாளிகாவத்தை மற்றும் வெல்லம்பிட்டிய பிரதேசங்களில் உள்ள இரண்டு பாடசாலைகளை சகல வசதிகளுடன் கூடிய பிரதான பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

சிங்கள மொழி மூலம் இஸ்லாத்தை போதிக்கும் ஆசிரியர்களின் பற்றாக்குறை மற்றும் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தாமதமாகி வரும் அல் ஆலிம் பரீட்சை குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.

முஸ்லிம் பாடசாலைகளுக்குத் தேவையான பாடசாலைக் கட்டிடங்கள் நிர்மாணித்தல், விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல் உள்ளிட்ட பௌதீக குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டதுடன் மேலும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்தும் கல்வி அமைச்சு மற்றும் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றைத் உடனடியாக தீர்க்குமாறு ஆலோசனை வழங்கிய ஜனாதிபதி, மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண அரச நிறுவனங்களுக்கும் இடையில் நல்லதொரு ஒருங்கிணைப்பின் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, மேல்மாகாண ஆளுநர் மார்ஷல் ஆப் தி எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா உட்பட தொடர்புள்ள நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கொழும்பு முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...