follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பேலியகொடையில் அழுகிய மீன் விற்பனை அதிகரிப்பு

பேலியகொடையில் அழுகிய மீன் விற்பனை அதிகரிப்பு

Published on

பேலியகொட மத்திய மீன் சந்தையில் அழுகிய மீன் விற்பனை அதிகரித்துள்ளதாக கடற்றொழில் அமைச்சு கண்டுபிடித்துள்ளது.

கடந்த மே மாதம் 17ஆம் திகதி பேலியகொட மத்திய மீன் சந்தை முகாமையாளர் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதில் கெட்டுப்போன மீன்கள் மற்றும் தகாத மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.

இதனால், மீன்பிடி அமைச்சின் செயலாளராக இருந்த முகாமைத்துவ அறக்கட்டளையின் தலைவி குமாரி சோமரத்ன, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகரிடம் அறிக்கைகளை கோர தீர்மானித்துள்ளார்.

பேலியகொடை மத்திய மீன் சந்தையில் 154 மொத்த வியாபாரக் கடைகளும் 124 சில்லறை மீன் கடைகளும் உள்ளதாக பேலியகொடை மத்திய மீன் மொத்த விற்பனை சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே கூறுகிறார்.

அப்புறப்படுத்தப்படும் அழுகிய மீன்களை சேகரித்து விற்பனை செய்யும் கும்பல் ஒன்று இருப்பதாகவும், இது தொடர்பில் தொழிற்சங்க நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீன்பிடி அமைச்சின் செயலாளராக இருந்த குமாரி சோமரத்ன, நாரா நிறுவனம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு விரிவான விசாரணை நடத்தி அறிக்கைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி இரண்டு மாதங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை ஒரு அறிக்கை கூட வழங்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...

இ.போ.ச மத்திய பஸ் தரிப்பிடத்தை நவீன மயப்படுத்த நடவடிக்கை

நாட்டின் பிரதான பஸ் தரிப்பிடமான மத்திய பஸ் தரிப்பு நிலையம் ஊடாக தினசரி 2000 பயணங்கள் அளவில் இடம்பெறுவதாகவும்...