follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

பெண்ணின் தலைமுடியை வெட்டிய மௌலவிக்கு விளக்கமறியல்

Published on

தற்போது சமூகவலைத்தளங்களில் பரவிவரும் சம்பவமான மௌலவி ஒருவர் பெண்ணின் தலை முடியை வெட்டிய சம்பவம் தொடர்பிலான உண்மைத்தன்மை குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவினரிடம் டெய்லி சிலோன் வினவினோம்.

கண்டி – வத்தேகமவில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பேரூந்தில் நேற்று (12) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின் இருக்கையில் அமர்ந்திருந்த மௌலவி ஒருவர் அதே பேரூந்தில் முன் இருக்கையில் இருந்த இளம்பெண்ணின் 4 அடி நீளமுள்ள தலைமுடியின் ஒரு அடியை கத்தரிக்கோலால் வெட்டியிருக்கிறார்.

பின்னர் கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் இதனைக் கண்ட பெண் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அதன்படி அவரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது, ​​அவரிடம் கத்தரிக்கோல் ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. யுவதியின் தலைமுடியை வெட்டியதையும் மௌலவி ஒப்புக்கொண்டார்.

பின்னர் இன்று (13) குறித்த மௌலவியை கண்டி நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...