follow the truth

follow the truth

August, 6, 2025
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

Published on

தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நிலைய அதிபர்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், உரிய பிரச்சினையை அமைச்சரவையில் முன்வைத்து தீர்வு வழங்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் உறுதிமொழிக்கு அமைய பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு அமைச்சரவை நேற்று (15) கவனம் செலுத்தாததால், இன்று காலை கூடி தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எதிர்காலத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...