follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

ரயில் பணிப்புறக்கணிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்

Published on

தமது கோரிக்கைகள் தொடர்பிலான எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (16) இறுதித் தீர்மானத்திற்கு வரவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்க அதிகாரிகள் இணக்கம் தெரிவித்த போதிலும் இதுவரை உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை என சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நிலைய அதிபர்கள் அண்மையில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், உரிய பிரச்சினையை அமைச்சரவையில் முன்வைத்து தீர்வு வழங்கப்படும் என விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் உறுதிமொழிக்கு அமைய பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

எவ்வாறாயினும், தமது கோரிக்கைகளுக்கு அமைச்சரவை நேற்று (15) கவனம் செலுத்தாததால், இன்று காலை கூடி தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கவுள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் எதிர்காலத்தில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நேர்ந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என அதன் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...