follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉலகம்மியன்மார் முன்னாள் தலைவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

மியன்மார் முன்னாள் தலைவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

Published on

மியன்மார் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்து வேறுபாடுகளைத் தூண்டுதல் மற்றும் கொவிட் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

76 வயதான அவர் பெப்ரவரியில் இராணுவப் புரட்சி மூலம் வெளியேற்றப்படுவதற்கு முன்புஇ தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கத்திற்கு தலைமை தாங்கினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் வாக்காளர் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

இதனையடுத்து, ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதுடன், பல ஊழல் குற்றச்சாட்டுகள்,உத்தியோகபூர்வ இரகசிய சட்டத்தை மீறுதல் மற்றும் பொது அமைதியின்மையை தூண்டுதல் உட்பட பல குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

அவர்மீதான 11 குற்றச்சாட்டுக்களில் ஒரு குற்றச்சாட்டுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரத்தில் ரஷ்ய அமைச்சர் தற்கொலை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பதவி நீக்கம் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு ரஷ்ய போக்குவரத்து அமைச்சர்...

அமெரிக்க கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரிக்ஸ் நாடுகளுக்கு மேலதிக வரி

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க கொள்கைகளை எதிர்க்கும் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

கர்ப்பமான பாடசாலை மாணவிகளுக்கு ரூ.1 இலட்சம் உதவித்தொகை – ரஷ்யாவில் புதிய அரசு திட்டம்

மக்கள் தொகை சரிவை சமாளிக்க, ரஷியாவில் புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அரசுத் திட்டமொன்று அறிமுகமாகியுள்ளது. கர்ப்பமான பள்ளி மாணவிகளுக்கு...