follow the truth

follow the truth

July, 27, 2024
Homeஉள்நாடுபிரியந்த குமார படுகொலை தனிப்பட்ட சம்பவம்! இலங்கை உயர்ஸ்தானிகர்

பிரியந்த குமார படுகொலை தனிப்பட்ட சம்பவம்! இலங்கை உயர்ஸ்தானிகர்

Published on

இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை முகாமையாளர் பிரியந்த குமார தியவடன படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் பாகிஸ்தான் அதிகாரிகளின் பதில் திருப்தி அளிப்பதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் வைஸ் அட்மிரல் மொஹான் விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தால் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு பாதிக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (06) பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்குச் சென்று சம்பவம் தொடர்பில் தமது அனுதாபங்களைத் தெரிவித்தது.

இவ்வாறான சம்பவங்களை குறைத்து மதிப்பிட முடியாது என இலங்கை உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த சம்பவம் தமது நாட்டையோ, மதத்தையோ அல்லது இனத்தையோ இலக்கு வைத்து நடத்தப்படவில்லையென உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு அவர் அதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகும் என்று குறிப்பிட்டார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் சட்டத்துக்கு எதிராக எவரும் செயற்பட முடியாது – அறிவுறுத்தல் நிரூபம் வெகுவிரைவில்

தேர்தல் சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளில் எவரும் ஈடுபட முடியாது எனவும் தேர்தல் தொடர்பான செயற்திட்டங்கள் மற்றும் சட்ட வழிமுறைகள்...

2024 ஜூன் வரையில் 735.56 மில்லியன் ரூபாய் வருமானம்

”2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், தாவரவியல் பூங்காவைப் பார்வையிட வந்த உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முறையே...

முட்டை விலை 38 ரூபாவாக குறைக்காவிடின் மீண்டும் இறக்குமதி செய்வோம்

உள்ளூர் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை ஒன்றின் விலையை ரூ.38 ஆக குறைக்காவிட்டால் மீண்டும் முட்டை இறக்குமதியை ஆரம்பிப்போம் என...