follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1ஜனாதிபதியின் வெற்றியை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் சேறு பூசுகின்றனர்

ஜனாதிபதியின் வெற்றியை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் சேறு பூசுகின்றனர்

Published on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியினை சகிக்க முடியாத அரசியல் குழுக்கள் மேடைகளில் சேறுபூசும் பிரசாரங்களை மேற்கொண்டு அதிகாரத்தை பெற முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகருமான ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

அன்று ரணில் சவாலை ஏற்காமல் இருந்திருந்தால், இலங்கை இன்று இருக்கும் நிலையில் இருந்திருக்காது என்றும் அவர் கூறினார்.

‘ஜயகமு’ கம்பஹா பொதுச் சபையில் உரையாற்றும் போதே ருவான் விஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்திற்கே இன்றைய தினம் விசேட தினமாகும். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளன. அவரது இரண்டு வருட நிறைவு விழா கம்பஹாவில் இடம்பெற்றது.

ரணில் விக்கிரமசிங்க இலங்கைக்கு புதிய அரசியல் கலாசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இன்று இந்த மேடைகளைப் பார்க்கும்போது, ​​அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும் உள்ளனர். இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவே அவர்கள் தங்கியிருப்பதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராமிய மக்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக மாற்ற வேண்டும்

நாட்டின் பொருளாதார நன்மைகள் கீழ்நிலை கிராமிய மக்களுக்குச் செல்லாவிட்டால், புள்ளிவிவரங்களில் எவ்வளவு பொருளாதார வளர்ச்சி எட்டப்பட்டாலும், எந்தப் பயனும்...

தொழிற்கல்வி எதிர்காலத்தில் இந்த நாட்டில் தீர்க்கமான பாடமாக்கப்படும்.

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும்...

ராகம – கந்தானை – வத்தளை பகுதிகளில் விசேட சோதனை நடவடிக்கை

ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்றிரவு(04) இராணுவ படையினர், கடற்படை, சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் ஆகியோர்...