follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.. ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும்

பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.. ஜனாதிபதி தேர்தல் கண்டிப்பாக நடத்தப்படும்

Published on

ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் நேற்று (22) உறுதியளித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தேர்தலுக்கு மாத்திரம் வரவு செலவுத் திட்டப் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதால், அது நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அதன்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தை நடத்துவதற்கு வழங்கிய ஆதரவிற்கு ரணில் விக்கிரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க தயார் என எதிர்க்கட்சிகள் கூறினாலும், ஜனாதிபதி தேர்தலை கண்டிப்பாக நடத்துவேன் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமது அரசாங்கம் உழைத்து நாட்டுக்கு காட்டியுள்ளதாகவும், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட ஏனைய குழுக்கள் இன்னமும் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...

2029ல் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சாதாரண தரப் பரீட்சை

2026-ல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டுதல்களை 2025 ஓகஸ்டில் வெளியிட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் மற்றும்...