follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1"சிறுநீரகம் அகற்றப்பட்ட மூன்று வயது ஹம்திக்கு நியாயம் எங்கே?"

“சிறுநீரகம் அகற்றப்பட்ட மூன்று வயது ஹம்திக்கு நியாயம் எங்கே?”

Published on

இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்ட நிலையில் கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஹம்தி என்ற மூன்று வயதுக் குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் இன்று (23) தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வரவில்லை என சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகிய நிலையில் விசேட உரையொன்றை ஆற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்;

“.. குழந்தை இறந்து ஒரு வருடம் ஆகிறது. சத்திரசிகிச்சையை மேற்கொண்ட வைத்தியர் நளின் விஜேகோன் மற்றும் ஸ்கேன் பரிசோதனை செய்த வைத்தியர் நுவன் ஹேரத் ஆகியோரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருவரும் அதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த இரண்டு சிறுநீரகங்களும் இன்று மருத்துவமனையில் இல்லை. சிறுநீரகம் அகற்றப்பட்டால், அது மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஓராண்டு கடந்தும் இதுவரை அறிக்கை வரவில்லை. இது தொடர்பாக சுகாதார அமைச்சு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?..”

சுகாதார அமைச்சர் டாக்டர் ரமேஷ் பத்திரன பதிலளிக்கையில்;

“.. இதற்கு என்னிடம் இன்னும் பதில் இல்லை. அறிக்கை பெற்று அடுத்த வாரம் பதில் அளிக்கப்படும்…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மேத்யூஸின் இறுதிப் போட்டி இன்று – நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்...

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...