follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெலி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு

ஜீவன் தொண்டமானுக்கு ஆதரவு தெரிவித்து களனிவெலி பெருந்தோட்ட மக்கள் பணி பகிஷ்கரிப்பு

Published on

நுவரெலியா மாவட்டத்தில் இயங்கும் களனி வெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து பெருந்தோட்டங்களிலும் தொழிலாளாளர்கள் தமது வழமையான தேயிலை தொழிலை ஸ்தம்பித்தப்படுத்தி பணிபுறக்கணிப்பில் செவ்வாய்கிழமை (23) காலை ஈடுப்பட்டுள்ளனர்.

இரண்டு முக்கிய காரணங்களை முன் வைத்து இந்த பணிப்புறக்கணிப்பில் செவ்வாய் கிழமை(23) தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர்.

1,700 ரூபாய் சம்பளத்தை தர மறுக்கும் களனிவெளி கம்பனி தொழிலாளர்கள் அடி வயிற்றில் அடித்து அடாவடி போக்கை கடைப்பிடிப்பதாகவும்,

இத்தகைய அடாவடியை கண்டித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்ய இந்த கம்பனி நடவடிக்கை எடுத்ததை கண்டித்தும் இந்த பணிபுறக்கணிப்பு செய்யப்படுவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

அந்த வகையில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் போடைஸ், பட்டல்கல,சாஞ்சிமலை,இன்வெரி,இஞ்ஸ்ட்ரி,ரொப்கில்,சாஞ்சமலை,பிலிபோனி

அதேபோல் நுவரெலியா பீட்று தோட்டத்திற்கு கீழ் இயங்கும் பீட்று,லவர்சிலீப்,மூன்பிளேன், மாகாஸ்தோட்ட,ஸ்கிராப் ஆகிய தோட்டங்களுடன் ஒலிபண்ட் மற்றும் நுவரெலியா டிவிஷன் ஆகிய தோட்டங்களிலும் தொழிலாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேபோல நானுஓயா பிரதேசத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் எடின்புரோ,கிளாசோ,ஆடிவன், மற்றும் கிளாஸோ மேல் பிரிவு கீழ் பிரிவு ஆகிய தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் மற்றும்

உடரதல்ல மேல் மற்றும் கீழ் பிரிவு தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களும் பணி பறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதேநேரத்தில் களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்தின் கீழ் இயங்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஹேலீஸ் பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் ரதல்ல மேல்பிரிவு தொழிலாளர்களும், வங்கி ஓயா கீழ் பிரிவு தொழிலாளர்களும் பணிபுறக்கனிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எங்களுடைய சம்பள விடயத்திற்கும், அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும் நியாயம் கிட் வேண்டும் என்றும், இதற்கான தீர்வுகள் உடணடியாக கிடைக்காவின் வேறு விதத்தில் தொடர் போராட்டங்கள் இடம்பெறும் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...