follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1ஜேவிபி இனால் உயிருக்கு அச்சுறுத்தல் - ஹட்சன் சிஐடி இல் முறைப்பாடு

ஜேவிபி இனால் உயிருக்கு அச்சுறுத்தல் – ஹட்சன் சிஐடி இல் முறைப்பாடு

Published on

தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து வசந்த சமரசிங்க விடுத்த அச்சுறுத்தல் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஹட்சன் சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி
வசந்தவின் உரையில் ஹட்சனுக்கு கொலை மிரட்டல்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை – பிரான்ஸ் இடையே உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கை மற்றும் பிரான்ஸ் இடையிலான வௌிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பில் இந்த...

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவது குறித்து அவதானம்

அடுத்த மூன்று மாதங்களுக்குள் இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. உலக உணவுப் பாதுகாப்புக்...

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை

மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலை காரணமாக நாட்டில் பெட்ரோலியம் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவி...