follow the truth

follow the truth

August, 19, 2025
HomeTOP1ஜேவிபி இனால் உயிருக்கு அச்சுறுத்தல் - ஹட்சன் சிஐடி இல் முறைப்பாடு

ஜேவிபி இனால் உயிருக்கு அச்சுறுத்தல் – ஹட்சன் சிஐடி இல் முறைப்பாடு

Published on

தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹட்சன் சமரசிங்கவை இலக்கு வைத்து வசந்த சமரசிங்க விடுத்த அச்சுறுத்தல் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

அந்த அறிக்கையின் அடிப்படையில் ஹட்சன் சமரசிங்கவினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி
வசந்தவின் உரையில் ஹட்சனுக்கு கொலை மிரட்டல்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...