follow the truth

follow the truth

April, 30, 2025
HomeTOP2இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு வரும் புதிய நிபந்தனைகள்

Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் எதிர்வரும் சர்வதேசப் போட்டிகளில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்றுவிப்பாளர் சனத் ஜெயசூரிய விடுத்துள்ளார்.

அதன்படி, சர்வதேச போட்டிகளில் தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தினால், பச்சை குத்திக்கொள்வது, நெக்லஸ்கள் மற்றும் காதணிகள் அணிவது தடை செய்யப்பட்டுள்ளதுடன் முடியை ஒழுங்காக வெட்டி நேர்த்தியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சனத் ஜயசூரிய தற்காலிகமாக பயிற்சியாளராக இருந்தாலும், தேசிய வீரர்களை முன்மாதிரியாகக் கொண்டு அவர்களை முன்மாதிரியாகக் கொள்ளும் பாடசாலை விளையாட்டு வீரர்களும் இருப்பதாகவும், எனவே இலங்கை அணி ஒழுக்கத்துடன் பயிற்சியளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“நாங்கள் பெரிய விஷயங்களைச் செய்ய முயற்சிக்கவில்லை. ஆனால் சிறிய விஷயங்களை கூட ஒழுங்காக செய்ய வேண்டும். தற்போது சர்வதேச போட்டிகளுக்கு வரும்போது முடி, காதணி, டாட்டூ போன்றவற்றை வீட்டில் வைத்து விட்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளோம்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...

பிரசன்ன ரணவீரவின் ரிட் மனு தள்ளுபடி

களனி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அரசாங்க காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்திய சம்பவம் தொடர்பாக தம்மை கைது செய்வதைத்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ அளவான பலத்த மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக...