follow the truth

follow the truth

August, 27, 2025
Homeஉள்நாடுபிரியந்தவின் சடலம் கனேமுல்லவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது

பிரியந்தவின் சடலம் கனேமுல்லவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது

Published on

பாகிஸ்தான் – சியல்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தியவடனவின் சடலம் கனேமுல்ல – கெந்தலியத்த பாலுவ பகுதியிலுள்ள இல்லத்திற்கு   இன்று (07) அதிகாலை 2.30 மணியளவில் கொண்டு செல்லப்பட்டுள்ளன .

அவரது சரீரத்தை ஏந்நிய விமானம் நேற்று மாலை 5.5 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இதனையடுத்து சரீரம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதேவேளை, நேற்றையதினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது, கொலை செய்யப்பட்ட பிரியந்த குமார தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரியந்த குமாரவின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு 25,000,000 ரூபாவை நிவாரணமாக வழங்க அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து ,பிரியந்த குமாரவின் சடலம் நாளைய தினம் (08) கனேமுல்லை பொல்ஹேன பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...