follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு

இலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு

Published on

உத்தேச இலங்கை கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு
சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து அமைச்சரவைக்கு விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழுவின் அறிக்கையின் விதந்துரைகளுக்கமைய இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.19 அன்று இடம்பெற்ற
அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த குழுவால் இலங்கை கிரிக்கெட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

உத்தேச இலங்கை கிரிக்கெட் இற்கான யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Clean Sri Lanka என்பது எம் அனைவரினதும் lifestyle ஆக இருக்க வேண்டும்

ஒவ்வொரு அதிபரும் தமது பாடசாலையில் Clean Sri Lanka திட்டத்தை முழு நாட்டிற்கும் முன்னுதாரணமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும்,...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புதிட்டம்

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட உரையில் முன்வைக்கப்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட நிலையான வைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம்...

தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றம்

இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஈரான் தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகத்தை...