follow the truth

follow the truth

July, 6, 2025
HomeTOP1தென்னை பயிர்ச்செய்கையில் உள்ள பிரச்சினைகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்

தென்னை பயிர்ச்செய்கையில் உள்ள பிரச்சினைகளை தெரிவிக்க தொலைபேசி இலக்கம்

Published on

தென்னை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாக தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

1916 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.

வெள்ளை ஈ நோய் உள்ளிட்ட தென்னைச் செய்கை தொடர்பான பிரச்சினைகளை விவசாயிகளுக்கு நேரடியாகத் தெரிவிக்கக்கூடிய தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்துமாறு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர, தென்னைச் செய்கை சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்த இலக்கம் செயற்பாட்டில் இருப்பதோடு தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தெரிவிக்கப்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக பதிலளித்து தேவையான பதில்களை வழங்க அதிகாரிகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் பண்டுக வீரசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...