follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடு138 கடவத்தை - புறக்கோட்டை பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு

138 கடவத்தை – புறக்கோட்டை பேருந்துகள் பணிப்புறக்கணிப்பு

Published on

இன்று (31ஆம் திகதி) காலை 138 கடவத்தை – புறக்கோட்டை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் பேருந்துகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.

இதன்படி கடவத்தை – புறக்கோட்டை, வெலிவேரிய – கோட்டை மற்றும் கிரில்லவல – கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அனைத்து பேரூந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை.

அதனை ஈடு செயும் வகையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பல பேரூந்துகள் உடனடியாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கிரிபத்கொட – புறக்கோட்டை மார்க்கத்தில் புதிய பேரூந்துகள் பலவற்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளமையால் தமது வருமானம் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக 138 பேரூந்து உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கடவத்தை – புறக்கோட்டை பேரூந்து தரிப்பிடத்தில் அதிகளவு சேறு படிந்துள்ளதால் பேரூந்துகள் பழுதாகி வருவதாக தெரிவிக்கும் பேரூந்து சாரதிகள், அப்பகுதியில் கழிவறைகள் நிரம்பி வழிவதால் கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இதுதொடர்பான காரணங்களுக்கு தீர்வு காணுமாறு கோரியே தாம் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதாகவும், தீர்வு கிடைக்காவிடின் பேரூந்து சேவையை கைவிடுவதாகவும் பேரூந்து சாரதிகள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இது தொடர்பான பேருந்து பணிப்புறக்கணிப்பு காரணமாக அவ்வழியாக செல்லும் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கல்கமுவ – பாலுகடவல வாவியில் மூழ்கி 2 சிறுமிகள் உயிரிழப்பு

கல்கமுவ - பாலுகடவல வாவியில் மூழ்கி, சிறுமிகள் இருவர் உயிரிழந்தனர். 12 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் இருவரே...

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...