follow the truth

follow the truth

August, 24, 2025
HomeTOP1தோல்வி குறித்து கவலையாக இருக்கின்றது - சரித் அசலங்க

தோல்வி குறித்து கவலையாக இருக்கின்றது – சரித் அசலங்க

Published on

தலைவனாக விளையாடிய முதல் தொடரிலேயே தோல்வியை தான் ஏற்றுக் கொள்வதாக இருபதுக்கு20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச வீரராக அழுத்தத்தை எதிர்கொள்ள அனைவரின் மனமும் திடமாக இருக்க வேண்டும் என்று அங்கு கூறினார்.

நேற்று (30) இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த சரித் அசலங்க;

“இது ஒரு கடினமான நேரம் மற்றும் கேப்டனாக முதல் போட்டி தோல்வியடைந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இது ரசிகர்களுக்கும் எனக்கும் அணிக்கும் மிகவும் வருத்தமாக இருக்கிறது.

ரசிகர்களை நாம் மீண்டும் ஏமாற்றிவிட்டோம். நாம் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். குழுவுடனும் இதுகுறித்து நானும் பேசினேன். நாங்கள் சிறந்த நிலை அணிகளில் விளையாடுகிறோம் என்று நான் நினைக்கிறேன், நாங்கள் எங்கள் திறமைகளை இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆட்டத்தின் கடைசி 12 பந்துகளில் நாங்கள் 09 ஓட்டங்களை எடுக்க வேண்டியிருந்தது. நான் முன்பே சொன்னது போல், இந்த நிலையில் நாங்கள் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். இனிமேலாவது பயிற்சி செய்ய வேண்டும்.

முதலில் செய்ய வேண்டியது பயிற்சி. நாங்கள் எவ்வளவு பயிற்சி எடுத்தோம் என்பது முக்கியமில்லை, சர்வதேச வீரர்களைப் போல் நடந்து கொள்ள வேண்டும்..” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜெர்மனி ஒலிம்பிக் சாம்பியன் வீராங்கனைக்கு பாகிஸ்தானில் நேர்ந்த கதி

ஜெர்மனியை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியன் லாரா டோல்மேயர் பாகிஸ்தானில் மலை ஏறிக்கொண்டிருந்தபோது நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். திங்கட்கிழமை (28) கில்கிட்-பால்டிஸ்தான்...

பிறப்புறுப்பை கடித்த நாய் – பார்சிலோனாவின் முன்னாள் வீரர் மருத்துவமனையில் அனுமதி

பார்சிலோனா அணிக்காக விளையாடியவர் கார்லஸ் பெரேஸ். 27 வயதான ஸ்பெயின் ரைட் விங் கால்பந்து வீரரான இவர் செல்டா...

இலஞ்சம் கொடுத்தாலும், வாங்கினாலும் பயப்பட வேண்டும் – அநுர அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

இலங்கை விரைவில் யாரும் லஞ்சம் வாங்குவதை நினைத்தும் பாரக்க முடியாத நாடாக மாறும் என்றும், சட்டம் அனைவருக்கும் சமமாக...